states

img

ஆந்திர பாஜக தலைவர் மீது செருப்பு வீசிய நாயுடு கட்சிக்காரர்... தொலைக்காட்சி நேரலையில் நடந்த சம்பவம்...

விஜயவாடா:
ஆந்திராவில் ஏபிஎன் செய்தித் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின் போது பாஜக மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நடந்துஉள்ளது.

விஷ்ணு வர்தன் மீது செருப்பை வீசியவர் அமராவதி பரிரக்‌ஷனா சமிதி இணைச் செயற்குழு உறுப்பினரான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ் என்பதுடன், இவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு நெருக்கமானவர்என்பது தெரியவந்துள்ளது.அதாவது தொலைக்காட்சி விவாதத்தின்போது, பாஜக தலைவர் விஷ்ணு வர்தன், அமராவதி பரிரக்‌ஷனா சமிதியின் ஸ்ரீநிவாச ராவை நோக்கி, உங்களுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் தொடர்பு? நீங்கள் தெலுங்குதேசம் கட்சியின் ஆள் போலத் தெரிகிறீர்கள்... என்ற தொனியில் கூறவே, கோபமடைந்த ஸ்ரீநிவாச ராவ் செருப்பை கழற்றி விஷ்ணு வர்தன் மேல் வீசியுள்ளார்.இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு இப்படி காசு கொடுத்து டம்மிகளை விவாதத்துக்கு அனுப்புகிறார் என்று பாஜக தேசியத் தலைவர் சுனில் தியோதரும் கொதித்துள்ளார்.

;